Total Pageviews

Thursday, 29 August 2024

மனிதன் நினைப்பதுண்டு… வாழ்வு நிலைக்குமென்று… இறைவன் நினைப்பதுண்டு… பாவம் மனிதனென்று…

 


                                   பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : மனிதன் நினைப்பதுண்டு…
வாழ்வு நிலைக்குமென்று…
இறைவன் நினைப்பதுண்டு…
பாவம் மனிதனென்று…

ஆண் : மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று
மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு
பாவம் மனிதனென்று
இறைவன் நினைப்பதுண்டு
பாவம் மனிதனென்று

ஆண் : மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று

ஆண் : தந்தை தவறு செய்தார்
தாயும் இடம் கொடுத்தாள்
தந்தை தவறு செய்தார்
தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம் வெறும்
வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்
மனது துடிக்கிறது
மயக்கம் வருகின்றது
அழுது லாபமென்ன
அவன் ஆட்சி நடக்கின்றது

ஆண் : மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று

ஆண் : காட்டு மனமிருந்தால்
கவலை வளர்ந்து விடும்
காட்டு மனமிருந்தால்
கவலை வளர்ந்துவிடும்
கூட்டை திறந்து விட்டால்
அந்த குருவி பறந்து விடும்

காலில் விலங்கும் இட்டோம்
கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம்
நாட்டியம் ஆடுகின்றோம்

ஆண் : மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று

ஆண் : விதியின் ரதங்களிலே நாம்
விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா
சிறு மனமும் கலங்குதடா
கொடுக்க எதுவுமில்லை
என் குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன்
ஒரு கவலை முடிந்ததடா

ஆண் : மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு
பாவம் மனிதனென்று

No comments:

Post a Comment