Total Pageviews

Sunday 11 September 2016

உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால். .


படம் : வேட்டைக்காரன்

இசை : K.V.மகாதேவன்

பாடல் : கண்ணதாசன்

பாடியவர் : T.M.சௌந்தராஜன்

வருடம்: 1964

🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹

உன்னை அறிந்தால்...


நீ உன்னை அறிந்தால். .

உலகத்தில் போராடலாம்

உயர்ந்தாலும். . . தாழ்ந்தாலும். . .

தலை வணங்காமல் நீ வாழலாம்

(உன்னை)


மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை

மான் என்று சொல்வதில்லையா. . .

தன்னை தானும் அறிந்து கொண்டு

ஊருக்கும் சொல்பவர்கள்

தலைவர்கள் ஆவதில்லையா. . .

(மானம் பெரியதென்று)
.
.
.
(உன்னை அறிந்தால்)

மாபெரும் சபைகளில் நீ நடந்தால்

உனக்கு மாலைகள் விழவேண்டும்

ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று

போற்றிப் புகழ வேண்டும்

(மாபெரும்)

உன்னை அறிந்தால்...


நீ உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம்

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

தலை வணங்காமல் நீ வாழலாம். . .

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் !




படம்: முள்ளும் மலரும்

இசை: இளையராஜா

பாடியவர் : யேசுதாஸ்

பாடலாசிரியர்: கண்ணதாசன்

வருடம் : 1978

🎶🎧🎶🎧🎶🎧🎶🎧🎶🎧

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

என் மீது மோதுதம்மா

செந்தாழம்பூவில்...

பூ வாசம் மேடை போடுதம்மா

பெண் போல ஜாடை பேசுதம்மா

அம்மம்மா. . . ஆனந்தம்

வளைந்து நெளிந்து போகும்பாதை

மங்கை மோக கூந்தலோ

மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்

பருவ நாண ஊடலோ...

ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது

ஆசை குயில் பாஷை இன்றி

ராகம் என்ன பாடுது

காடுகள் மலைகள் தேவன் கலைகள்

செந்தாழம்பூவில்...

அழகு மிகுந்த ராஜகுமாரி

மேகமாக போகிறாள்

ஜரிகை நெளியும் சேலை கொண்டு

மலையை மூட பார்க்கிறாள்

பள்ளம் சிலர் உள்ளம் என

ஏன் படைத்தான் ஆண்டவன்

பட்டம் தர தேடுகின்றேன்

எங்கே அந்த நாயகன்

மலையின் காட்சி இறைவன் ஆட்சி

செந்தாழம்பூவில்...

இளைய பருவம் மலையில் வந்தால்

ஏகம் சொர்க்க சிந்தனை

இதழில் வருடும் பனியின் காற்று

கம்பன் செய்த வர்ணனை

ஓடை தரும் வாடை காற்று

வான் உலகை காட்டுது

உள்ளே வரும் வெள்ளம் ஒன்று

எங்கோ என்னை கூட்டுது

மறவேன் மறவேன் அற்புத காட்சி

செந்தாழம்பூவில்...