Total Pageviews

Sunday 11 September 2016

உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால். .


படம் : வேட்டைக்காரன்

இசை : K.V.மகாதேவன்

பாடல் : கண்ணதாசன்

பாடியவர் : T.M.சௌந்தராஜன்

வருடம்: 1964

🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹

உன்னை அறிந்தால்...


நீ உன்னை அறிந்தால். .

உலகத்தில் போராடலாம்

உயர்ந்தாலும். . . தாழ்ந்தாலும். . .

தலை வணங்காமல் நீ வாழலாம்

(உன்னை)


மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை

மான் என்று சொல்வதில்லையா. . .

தன்னை தானும் அறிந்து கொண்டு

ஊருக்கும் சொல்பவர்கள்

தலைவர்கள் ஆவதில்லையா. . .

(மானம் பெரியதென்று)
.
.
.
(உன்னை அறிந்தால்)

மாபெரும் சபைகளில் நீ நடந்தால்

உனக்கு மாலைகள் விழவேண்டும்

ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று

போற்றிப் புகழ வேண்டும்

(மாபெரும்)

உன்னை அறிந்தால்...


நீ உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம்

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

தலை வணங்காமல் நீ வாழலாம். . .

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் !




படம்: முள்ளும் மலரும்

இசை: இளையராஜா

பாடியவர் : யேசுதாஸ்

பாடலாசிரியர்: கண்ணதாசன்

வருடம் : 1978

🎶🎧🎶🎧🎶🎧🎶🎧🎶🎧

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

என் மீது மோதுதம்மா

செந்தாழம்பூவில்...

பூ வாசம் மேடை போடுதம்மா

பெண் போல ஜாடை பேசுதம்மா

அம்மம்மா. . . ஆனந்தம்

வளைந்து நெளிந்து போகும்பாதை

மங்கை மோக கூந்தலோ

மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்

பருவ நாண ஊடலோ...

ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது

ஆசை குயில் பாஷை இன்றி

ராகம் என்ன பாடுது

காடுகள் மலைகள் தேவன் கலைகள்

செந்தாழம்பூவில்...

அழகு மிகுந்த ராஜகுமாரி

மேகமாக போகிறாள்

ஜரிகை நெளியும் சேலை கொண்டு

மலையை மூட பார்க்கிறாள்

பள்ளம் சிலர் உள்ளம் என

ஏன் படைத்தான் ஆண்டவன்

பட்டம் தர தேடுகின்றேன்

எங்கே அந்த நாயகன்

மலையின் காட்சி இறைவன் ஆட்சி

செந்தாழம்பூவில்...

இளைய பருவம் மலையில் வந்தால்

ஏகம் சொர்க்க சிந்தனை

இதழில் வருடும் பனியின் காற்று

கம்பன் செய்த வர்ணனை

ஓடை தரும் வாடை காற்று

வான் உலகை காட்டுது

உள்ளே வரும் வெள்ளம் ஒன்று

எங்கோ என்னை கூட்டுது

மறவேன் மறவேன் அற்புத காட்சி

செந்தாழம்பூவில்...

Wednesday 31 August 2016

கையிலே வாங்கினேன் பையிலே போடலே காசுபோன இடம் தெரியலே !



படம் : இரும்புத்திரை

பாடல் : பட்டுக்கோட்டை

இசை : வெங்கட்ராமன்

பாடியவர் : திருச்சி லோகநாதன்

வருடம் : 1960

🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼

கையிலே வாங்கினேன் பையிலே 


போடலே!

காசுபோன இடம் தெரியலே _ என்



காதலிப் பாப்பா காரணம் கேப்பா

ஏது சொல்வதென்றும் புரியலே

ஏழைக்கும் காலம் சரியில்லே. . .


மாசம் முப்பது நாளும் ஒழைச்சு

வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு

காசை வாங்கினாக் கடன்கார னெல்லாம்

கணக்கு நோட்டோட நிக்கிறான்

வந்து


எனக்கு உனக்குன்னு பிய்க்கிறான்

(கையிலே…)

சொட்டுச் சொட்டா வேர்வை விட்டா

பட்டினியால் பாடுபட்டா

கட்டுக்கட்டா நோட்டுச் சேருது

கெட்டிக்காரன் பொட்டியிலே

அது


குட்டியும் போடுது வட்டியிலே

(கையிலே…)


விதவிதமாய்த் துணிகள் இருக்கு

விலையைக் கேட்டா நடுக்கம் வருது

வகைவகையா நகைகள் இருக்கு

மடியைப் பார்த்தா மயக்கம் வருது

எதைஎதையோ வாங்கணுமின்னு 


அண்ணே      

(எதை)

எண்ணமிருக்கு வழியில்லே

இதை


எண்ணாமிலிருக்கவும் முடியல்லே

(கையிலே…)

கண்ணுக்கு அழகாப் பொண்ணைப் படைச்சான்

பொண்ணுக்குத் துணையா ஆணப் படைச்சான்

ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்

ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்

உலகம் நிறைய இன்பத்தைப் படைச்சான்

என்னைப் போலே பலரையும் படைச்சு

அண்ணே


என்னைப் போலே பலரையும் படைச்சு

இதுக்கும் அதுக்கும் ஏங்க வைச்சான்

ஏழையைக் கடவுள் ஏன் படைச்சான்?

(கையிலே…)

Thursday 14 July 2016

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் ?

திரைப்படம்:  இரு வல்லவர்கள்

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் + பி. சுசீலா

பாடல் : கவிஞர் கண்ணதாசன்

இசை: வேதா

ஆண்டு: 1966

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்

என் மகராணி உனக்காக ஓடோடி வந்தேன்

(நான் மலரோடு)

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்

உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

(நான் மலரோடு)


நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்

உன் வலை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்

உன் மலர்க் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்

உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்

நீ இல்லாமல் யாரோடு
உறவாட வந்தேன்

உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்.

(நான் மலரோடு)


பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத

நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக

நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற


நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்

உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

(நான் மலரோடு)



Monday 11 July 2016

படம் : எதிர் நீச்சல் : தாமரைக் கண்ணங்கள்..



படம் : எதிர் நீச்சல்

பாடியவர்கள் : P.B.ஸ்ரீனிவாஸ் + P.சுஷீலா

பாடல் : வாலி

இசை : குமார்

வருடம்: 1968

🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼

தாமரைக் கண்ணங்கள்.. !

தேன்மலர்க் கிண்ணங்கள் !

எத்தனை வண்ணங்கள்..!

முத்தமாய் சிந்தும் போது !

பொங்கிடும் எண்ணங்கள்!

மாலையில் சந்தித்தேன் !


மையலில் சிந்தித்தேன்!

மங்கை நான் கன்னித்தேன் !

காதலன் தீண்டும் போது கைகளை மன்னித்தேன் !.


கொத்து மலர்க்குழல் பாத மலந்திடும் சித்திரமோ...

முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ...

(கொத்து)

துயில் கொண்ட வேளையிலே...

குளிர் கண்ட மேனியிலே

துணை வந்து சேரும்போது

சொல்லவோ இன்பங்கள்

(மாலையில்)

ஆலிலை மேலொரு கண்ணனைப் போல் இவன் வந்தவனோ...

நூலிடை மேலொரு
நாடகமாடிட நின்றவனோ...

சுமை கொண்ட பூங்கொடியின்

சுவை கொண்ட தேன்கனியை

உடை கொண்டு மூடும்போது...

உறங்குமோ உன்னழகு...

(தாமரை)

தேன்மலர்க் கிண்ணங்கள்!

எத்தனை வண்ணங்கள்.. !

முத்தமாய் சிந்தும் போது !

பொங்கிடும் எண்ணங்கள் !

மாலையில் சந்தித்தேன் !


மையலில் சிந்தித்தேன் !

மங்கை நான் கன்னித்தேன் !

காதலன் தீண்டும் போது கைகளை மன்னித்தேன்.


கொத்து மலர்க்குழல் பாத மலந்திடும் சித்திரமோ...

முத்து நகை தரும் மெல்லிய  செவ்விதழ் ரத்தினமோ...

(கொத்து)

துயில் கொண்ட வேளையிலே...

குளிர் கண்ட மேனியிலே

துணை வந்து சேரும்போது

சொல்லவோ இன்பங்கள்

(மாலையில்)

ஆலிலை மேலொரு
கண்ணனைப் போல் இவன் வந்தவனோ...

நூலிடை மேலொரு
நாடகமாடிட நின்றவனோ...

சுமை கொண்ட
பூங்கொடியின்

சுவை கொண்ட
தேன்கனியை

உடை கொண்டு மூடும்போது...

உறங்குமோ உன்னழகு...

(தாமரை)

எங்கே தேடுவேன் ? பணத்தை எங்கே தேடுவேன் ?




படம் : பணம்

இயற்றியவர் :  உடுமலை நாராயண கவி

இசை : M.S.விஸ்வநாதன்+இராமமூர்த்தி

பாடியவர் : N.S.கிருஷ்ணன்

வருடம் : 1953

🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵

எங்கே தேடுவேன்

எங்கே தேடுவேன்

பணத்தை எங்கே தேடுவேன்

உல‌க‌ம் செழிக்க‌ உத‌வும் ப‌ண‌த்தை எங்கே தேடுவேன்

அரசன் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை

(எங்கே தேடுவேன்)

கருப்பு மார்கெட்டில் கலந்து கொண்டாயோ

கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ

கிண்டி ரேஸில் சிக்கி கிருகிருத்தாயோ

அண்டின பேர்களை ரெண்டும் செய்யும் பணத்தை

( எங்கே தேடுவேன்)

பூமிக்குள் புதைந்து புதைய‌லானாயோ......

பொன்ந‌கையாய் பெண்மேல் தொங்குகின்றாயோ

சாமிக‌ள் அடிக‌ளில் ச‌ர‌ண் புகுந்தாயோ

ச‌ன்யாசி கோல‌த்தோடு உல‌வுகின்றாயோ

(எங்கே தேடுவேன்)

திருப்ப‌தி உண்டிய‌லில் சேர்ந்து விட்டாயோ

திருவ‌ண்ணாம‌லை குகை புகுந்தாயோ

இருப்புப் பெட்டிக‌ளில் இருக்கிறாயோ

இர‌க்க‌முள்ள‌வ‌ரிட‌ம் இருக்காத ப‌ண‌ந்தன்னை

எங்கே தேடுவேன்

பணத்தை எங்கே தேடுவேன்

தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ

தேக‌ சுக‌த்திற்க்காக‌ ஊட்டி சென்றாயோ

சுவ‌ற்றிக்குள் த‌ங்க‌மாய் ப‌துங்கி விட்டாயோ

சூட‌ம் சாம்பிரானியாய் புகைந்து போனாயோ

எங்கே தேடுவேன்

உல‌க‌ம் செழிக்க‌ உத‌வும் ப‌ண‌மே பணமே. . .
 

 

Friday 15 April 2016

ஒருவன் மனது ஒன்பதடா !





ஒருவன் மனது ஒன்பதடா அதில்

ஒளிந்து கிடப்பது எண்பதடா


உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா அதில்


உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா (ஒரு)

ஏறும்போது எரிகின்றான்


இறங்கும்போது சிரிக்கின்றான்


வாழும் நேரத்தில் வருகின்றான்


வறுமை வந்தால் பிரிகின்றான் (ஒரு)




ஒருவன் மனது ஒன்பதடா அதில்

ஒளிந்து கிடப்பது எண்பதடா


தாயின் பெருமை மறக்கின்றான்


தன்னலச் சேற்றில் விழுகின்றான்


பேய் போல் பணத்தைக் காக்கின்றான்


பெரியவர் தம்மைப் பகைக்கின்றான் (ஒரு)





ஒருவன் மனது ஒன்பதடா அதில்

ஒளிந்து கிடப்பது எண்பதடா


பட்டம் பதவி பெற்றவர் மட்டும்

பண்புடையோராய் ஆவாரா?


பள்ளிப் படிப்பு இல்லாத மனிதர்


பகுத்தறிவின்றிப் போவாரா? (ஒரு)


 

ஒருவன் மனது ஒன்பதடா அதில்

ஒளிந்து கிடப்பது எண்பதடா .....

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி !





இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி

எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
 

அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

உன்னையே நினைத்திருப்பான் உண்மையைத் 


தான் உரைப்பான்
 

ஊருக்குப் பகையாவான் ஞானத் தங்கமே
 

உன்னையே நினைத்திருப்பான் உண்மையைத் 

தான் உரைப்பான்
 

ஊருக்குப் பகையாவான் ஞானத் தங்கமே
 

அவன் ஊழ்வினை என்ன சொல்வேன் ஞானத் 

தங்கமே
 

ஞானத் தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
 

எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
 

அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு 


வைத்து
 

நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு 

வைத்து
 

நல்லவன் போல் நடிப்பான் ஞானத் தங்கமே
 

அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே
 

அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே
 

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
 

எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
 

அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

தொண்டுக் கென்றே அலைவான் கேலிக்கு 


ஆளாவான்
 

கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே
 

தொண்டுக் கென்றே அலைவான் கேலிக்கு 

ஆளாவான்
 

கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே
 

அவன் கடவுளiன் பாதியடி ஞானத் தங்கமே .... 

ஞானத் தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
 

எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
 

அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

பிள்ளையைக் கிள்ளi விட்டு தொட்டிலை 


ஆட்டிவிட்டு...
 

பிள்ளையைக் கிள்ளi விட்டு தொட்டிலை 

ஆட்டிவிட்டு

தள்ளi நின்றே சிரிப்பான் ஞானத் தங்கமே


அவன்தான் தரணியைப் படைத்தானடி ஞானத் 


தங்கமே

ஞானத் தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி


எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே


அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

 

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே !


என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே 

வெளிவரும் தயங்காதே..

 
 
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
 
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டுனில் நீதி மறையட்டுமே


தன்னாலே வெளிவரும் தயங்காதே
 

ஒரு
 
தலைவன் இருக்கிறான் மயங்காதே


ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

பின்னாலே தெரிவது அடிச்சுவடு

முன்னாலே இருப்பது அவன் வீடு


நடுவினிலே நி விளையாடு
நல்லதை நினைத்தே நீ
  போராடு


நல்லதை நினைத்தே போராடு

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டுனில் நீதி மறையட்டுமே


தன்னாலே வெளிவரும் தயங்காதே


தலைவன் இருக்கிறான் மயங்காதே



ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!

உலகத்தில் திருடர்கள் சரி பாதி

ஊமைகள் குருடர்கள் அதி
ல் பாதி

கழகத்தில் பிறப்பதுதான் நீதி


மனம் கலங்கா
தே மதிமயங்காதே

கலங்கா
தே, மதிமயங்காதே

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டுனில் நீதி மறையட்டுமே


தன்னாலே வெளிவரும் தயங்காதே


தலைவன் இருக்கிறான் மயங்காதே


ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

மனதுக்கு மட்டும் பயந்துவிடு


 மானத்தை உடலில் கலந்துவிடு

இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு


இரண்டினில் ஒன்று பார்த்துவிடு


இரண்டினில் ஒன்று பார்த்துவிடு

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டுனில் நீதி மறையட்டுமே


தன்னாலே வெளிவரும் தயங்காதே


தலைவன் இருக்கிறான் மயங்காதே...
 

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி ?





எங்கே நிம்மதி எங்கே நிம்மதி

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்


எங்கே மனிதன் யாருமில்லையோ


அங்கே எனக்கோர் இடம் வேண்டும்


(எங்கே)



எனது கைகள் மீட்டும்போது


வீணை அழுகின்றது


எனது கைகள் தழுவும்போது


மலரும் சுடுகின்றது


என்ன நினைத்து என்னைப் படைத்தான்


இறைவன் என்பவனே


கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த


இறைவன் கொடியவனே.


(எங்கே)
 
பழைய பறவைபோல ஒன்று பறந்து வந்ததே

புதிய பறவை எனது நெஞ்சை


மறந்து போனதே


என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால்


வணங்குவேன் தாயே


இன்று மட்டும் அமைதி தந்தால்


உறங்குவேன் தாயே!


(எங்கே)

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு !



ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...


ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்


ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....


நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்


ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...


ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..


அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..


இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்


ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு....

வீடுவரை உறவு !

 
 ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...?

 
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா? (வீடு)

தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி! (வீடு)

சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்! (வீடு)

விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு! (வீடு)

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது !




உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா

தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்ப்பழி ஏற்றாயடா நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா
மன்னவர் பணியேற்கும் கண்ணனும் பணி செய்த
உன்னடி பணிவேனடா -கர்ணா
மன்னித்து அருள்வாயடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா

செஞ்சோற்று கடன் தீர்த்த சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா - கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
வஞ்சகன் கண்ணனடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா !

 
 

ஆடி அடங்கும் வாழ்க்கையடா!



 

ஆடி அடங்கும் வாழ்க்கையடா !
ஆறடி நிலமே சொந்தமடா !
ஆடி அடங்கும் வாழ்க்கையடா!
ஆறடி நிலமே சொந்தமடா!
ஆடி அடங்கும் வாழ்க்கையடா!

முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா !
கண் மூடினால் காலில்லா கட்டிலடா!
பிறந்தோம் என்பதே முகவுரையாம்!
பேசினோம் என்பதே தாய்மொழியாம்!
மறந்தோம் என்பதே நித்திரையாம்!
மரணம் என்பதே முடிவுரையாம் !
ஆடி அடங்கும் வாழ்க்கையடா !

 ஆறடி நிலமே சொந்தமடா !
ஆடி அடங்கும் வாழ்க்கையடா !

சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான் !
தீமைகள் செய்பவன் அழுகின்றான் !
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லைஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா


சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்

தீமைகள் செய்பவன் அழுகின்றான்

இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை

இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா!

ஆறடி நிலமே சொந்தமடா !

ஆடி அடங்கும் வாழ்க்கையடா !
 
 

Thursday 14 April 2016

ஆசையே அலைபோலே !






ஆசையே அலைபோலே நாமெலாம் அதன்மேலே
ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே! (ஆசை)

பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்? (ஆசை)

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்வதேன்
இளமை மீண்டும் வருமா
மணம் பெறுமா முதுமையே சுகமா!
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்? (ஆசை)

சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு!
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்? (ஆசை)

ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது !







ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது!

ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது !


ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது !


ஆகாயும் பூமியெங்கும் இளமை சிரிக்குது


வேண்டும் மட்டும் குலுங்கிக் குலுங்கி நானும் 


சிரிப்பேன் !

அந்த விதியைக் கூட சிரிப்பினாலே விரட்டி அடிப்பேன் !

ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது


ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது

குழந்தையிலே சிரிச்சது தான் இந்த சிரிப்பு !


அதைக் குமரிப் பொண்ணு சிரிக்கும் போது என்ன வெறுப்பு !


குழந்தையிலே சிரிச்சது தான் இந்த சிரிப்பு


அதைக் குமரிப் பொண்ணு சிரிக்கும் போது என்ன வெறுப்பு !


பொறந்ததுக்குப் பரிசு இந்த ...


பொறந்ததுக்குப் பரிசு 


இந்த சிரிப்பு அல்லவா

இது பொண்ணுக்காக இறைவன் தந்த பரிசு அல்லவா

பதமா இதமா சிரிச்சா சுகமா

ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது


ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது


வேண்டும் மட்டும் குலுங்கிக் குலுங்கி நானும் சிரிப்பேன் !


அந்த விதியைக் கூட சிரிப்பினாலே விரட்டி அடிப்பேன் !

குளம் குளமா தவம் இருந்து கொக்கு சிரிக்குது!


அது கொத்தப் போவதை மறந்து மீனும் சிரிக்குது


குளம் குளமா தவம் இருந்து கொக்கு சிரிக்குது


அது கொத்தப் போவதை மறந்து மீனும் சிரிக்குது
குளத்தை விட்டுக் கரையில் ஏறி நண்டு சிரிக்குது


குளத்தை விட்டுக் கரையில் ஏறி நண்டு சிரிக்குது


அதைக் கொண்டு போயி உண்டு பார்த்த நரியும் சிரிக்குது

பதமா இதமா சிரிச்சா சுகமா

ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது !


ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது!


வேண்டும் மட்டும் குலுங்கிக் குலுங்கி நானும் சிரிப்பேன் !


அந்த விதியைக் கூட சிரிப்பினாலே விரட்டி அடிப்பேன்!


ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது!


ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது!