Total Pageviews

Tuesday 27 September 2022

குறுக்கு வழியில்..?, வாழ்வு..?, தேடிடும்..?, குறுட்டு.., உலக..மடா..?,


 

 

குறுக்கு வழியில்..?, வாழ்வு..?, தேடிடும்..?, குறுட்டு.., உலக..மடா..?, இது கொள்ளை..?, அடிப்பதில்..?, வல்லமை.., காட்டும்..?, திருட்டு..?, உலகமடா..?, தம்பி..?, தெரிந்து.., நடந்து.., கொள்ளடா..?, இதயம்.., திருந்த.., மருந்து.., சொல்லடா..?, இருக்கும்.., அறிவை..?, மடமை.., மூடியே..?, இருட்டு.., உலகமடா..?, வாழ்வில்..?, எந்த.., நேரமும்..?, சண்டை.., ஓயாத..?, முறட்டு..?, உலகமடா..?, தம்பி..?, தெரிந்து.., நடந்து.., கொள்ளடா..?, இதயம்.., திருந்த.., மருந்து.., சொல்லடா..?, குறுக்கு வழியில்..?, வாழ்வு..?, தேடிடும்..?, குறுட்டு..?, உலக..மடா..?, ஆஆஆ.., இது கொள்ளை..?, அடிப்பதில்..?, வல்லமை.., காட்டும்..?, திருட்டு..?, உலகமடா..?, தம்பி..?, தெரிந்து.., நடந்து.., கொள்ளடா..?, இதயம்.., திருந்த.., மருந்து.., சொல்லடா..?, விளையும்..?, பயிரை..?, வளரும்..?, கொடியை..?, வேருடன்.., அறுத்து..?, விளையாடும்..?, ம்ம்ம்.., ஹோ..ஹோ.., ஹோஹோஹோ.., ஹோ.., விளையும்..?, பயிரை..?, வளரும்..?, கொடியை..?, வேருடன்.., அறுத்து..?, விளையாடும்..?, மனம்.., வெந்திடும்..?, தோட்டக்..காரனிடம்..?, இரட்டல்.., வார்த்தைகள்..?, ஆ..டும்..?, பல.., வறட்டு..?, கீதமும்..?, பாடும்..?, வித.., வித..மான..?, பொய்களை..?, வைத்து..?, உறட்டும்..?, உலகமடா..?, தம்பி..?, தெரிந்து.., நடந்து.., கொள்ளடா..?, இதயம்.., திருந்த.., மருந்து.., சொல்லடா..?, அன்பு.., படர்ந்த..?, கொம்பினிலே..?, ஒரு.., அகந்தைக்.., குரங்கு..?, தாவும்..?, அதன்.., அழகைக்..?, குலைக்க..?, மேவும்..?, கொம்பு.., ஒடிந்து..?, கொடியும்..?, குலைந்து..?, குரங்கும்.., விழுந்து..?, சாகும்..?, கொம்பு.., ஒடிந்து..?, கொடியும்..?, குலைந்து..?, குரங்கும்.., விழுந்து..?, சாகும்..?, சிலர்..?, குணமும்..?, இதுபோல்..?, குறுகிப்..?, போகும்..?, கிறுக்கு..?, உலகமடா..?, ஆஆ.., தம்பி..?, தெரிந்து.., நடந்து.., கொள்ளடா..?, இதயம்..?, திருந்த..?, மருந்து.., சொல்லடா..?, குறுட்டு வழியில்..?, வாழ்வு.., தேடிடும்..?, குறுட்டு.., உலக..மடா..?, ஆஆஆ.., இது கொள்ளை..?, அடிப்பதில்..?, வல்லமை.., காட்டும்..?, திருட்டு..?, உலகமடா..?, தம்பி..?, தெரிந்து.., நடந்து.., கொள்ளடா..?, இதயம்.., திருந்த.., மருந்து.., சொல்லடா..?, ஆஆஆ.., ஆஆஆ.., ஆ.., ஆ.., ஆ.., – KURUKKU VAZHIYIL VAZHVU THEDIDUM – MOVIE:- MAHADEVI (மகாதேவி)

காசே தான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா !

 

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

திரைப்படம்: சக்கரம்

காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா - அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா
காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா

கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக்
கைப்பற்ற நினைக்குது மனமே
கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக்



கைப்பற்ற நினைக்குது மனமே - நீ
தேடும் போது வருவதுண்டோ - விட்டுப்
போகும் போது சொல்வதுண்டோ? - நீ
தேடும் போது வருவதுண்டோ - விட்டுப்
போகும் போது சொல்வதுண்டோ?

காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா

அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்
அவனும் திருடனும் ஒன்றாகும்
அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்
அவனும் திருடனும் ஒன்றாகும்
வரவுக்கு மேலே செலவுகள் செய்தால்
அவனும் குருடனும் ஒன்றாகும்
களவுக்குப் போகும் பொருளை எடுத்து
வறுமைக்குத் தந்தால் தருமமடா
களவுக்குப் போகும் பொருளை எடுத்து
வறுமைக்குத் தந்தால் தருமமடா
பூட்டுக்கு மேலே பூட்டைப் போட்டு
பூட்டி வைத்தால் அது கருமமடா

காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா

கொடுத்தவன் விழிப்பான் எடுத்தவன் முடிப்பான்
அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே
கொடுத்தவன் விழிப்பான் எடுத்தவன் முடிப்பான்
அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே
சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிபபதும்
பணத்தால் வந்த நிலை தானே
சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிபபதும்
பணத்தால் வந்த நிலை தானே
கையிலும் பையிலும் ஓட்டமிருந்தால்
கூட்டமிருக்கும் பின்னோடு
தலைகளை ஆட்டும் பொம்மைகளெல்லாம்
தாளங்கள் போடும் பின்னோடு

காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா
கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக்
கைப்பற்ற நினைக்குது மனமே - நீ
தேடும் போது வருவதுண்டோ - விட்டுப்
போகும் போது சொல்வதுண்டோ? - நீ
தேடும் போது வருவதுண்டோ - விட்டுப்
போகும் போது சொல்வதுண்டோ?
காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா

கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே!

 Movie : En Annan 

Song : Kadavul Yen Kallanan 

Sung By : T. M. Soundararajan 

Lyric : Kannadasan

 Music : K. V. Mahadevan

 


 

கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே (3)

கொடுமையை
கண்டவன் கண்ணை
இழந்தான் அதை
கோபித்து தடுத்தவன்
சொல்லை இழந்தான் (2)

இரக்கத்தை
நினைத்தவன் பொன்னை
இழந்தான் (2)

இங்கு
எல்லோர்க்கும்
நல்லவன் தன்னை
இழந்தான் எல்லோர்க்கும்
நல்லவன் தன்னை இழந்தான்

கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே

நெஞ்சுக்கு
தேவை மனசாட்சி
அது நீதி தேவனில்
அரசாட்சி (2)

அத்தனை

உண்மைக்கும் அவன்
சாட்சி (2)
மக்கள் அரங்கத்தில்
வராது அவன் சாட்சி
அரங்கத்தில் வராது
அவன் சாட்சி

கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே

சதி செயல்
செய்தவன் புத்திசாலி
அதை சகித்துக்கொண்டிருந்தவன்
குற்றவாளி (2)

உண்மையை
சொல்பவன் சதிகாரன் (2)
இது உலகத்தில்
ஆண்டவன் அதிகாரம் (2)

கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே

கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே

 

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே!

திரைப்படம்: சித்தி இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் 

 இசை: எம்.எஸ். விஸ்வநாதன் 

 பாடியவர்: பி. சுசீலா 

 -------------------------------------------------  


காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
பெண்ணாகப் பிறந்தவர்க்கு கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம் இறப்பில் மறு தூக்கம்
இப்போது விட்டு விட்டால் எப்போதும் தூக்கமில்லை
என்னரிய கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு

ஆரீராரீரீ ஆரீராராரோ ஆரீஆரீராரோ
ஆரீராரீரீ ஆரீரீஆரோ ஆரீராரீரீரோ

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே

நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல்
நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும் தெள்ளு தமிழ்ப் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி
எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி
ஈரேழு மொழிகளுடன் போராடச் சொல்லுவதே தீராத தொல்லையடி

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே

மாறும் கன்னி மனம் மாறும் கண்ணன் முகம் தேடும்
ஏக்கம் வரும் போது தூக்கமென்பதேது?
தான் நினைத்த காதலனை தேற வரும் போது
தான் நினைத்த காதலனை தேற வரும் போது
தந்தை அதை மறுத்து விட்டால் கண்ணுறக்கம் ஏது? கண்ணுறக்கம் ஏது?

மாலையிட்ட தலைவன் வந்து சேலை தொடும் போது
மங்கையரின் தேன் நிலவில் கண்ணுறக்கம் ஏது? கண்ணுறக்கம் ஏது?

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே

ஐயிரண்டு திங்களிலும் பிள்ளை பெறும் போதும்
அன்னையென்று வந்த பின்னும் கண்ணுறக்கம் போகும் கண்ணுறக்கம் போகும்
கை நடுங்கிக் கண் மறைந்து காலம் வந்து தேடும்
கை நடுங்கிக் கண் மறைந்து காலம் வந்து தேடும்
காணாத தூக்கமெல்லாம் தானாக சேரும் தானாக சேரும்

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே

ஆரீராரீரீ ராரீராராரோ ஆரீராரீராரோ ஆ
ஆரீராரீரீ ஆரீராராரோ ஆரீராரீராரோ ஆரீராரீராரோ!

Sunday 18 September 2022

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை !

 

 

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை

பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணம் இல்லாத மனிதருக்கு சொந்தமெல்லாம் துன்பம்

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை

மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு

அவன் கனவில் அவள் வருவாள், அவனை பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார்? யாரை பார்த்து அணைப்பாள்?

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

படம் : அன்னை
பாடியவர் : சந்திரபாபு
பாடல் வரிகள் : கண்ணதாசன்

போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே இறைவன் புத்தியை கொடுத்தானே!

போயும் போயும் Poyum Poyum Lyrics in Tamil from Thaai Sollai Thattadhe (1961)

Poyum Poyum Lyrics in Tamil. போயும் போயும் - பாடல் வரிகள், Poyum Poyum song is from Thaai Sollai Thattadhe 1961. The Movie Star Cast is M. G. Ramachandran and B. Saroja Devi. Singer of Poyum Poyum is T. M. Soundararajan. Lyrics are written by Kannadasan. Music is given by K. V. Mahadevan. Poyum Poyum Lyrics in English

  • Song : Poyum Poyum
  • Movie/Album Name : Thaai Sollai Thattadhe 1961
  • Star Cast : M. G. Ramachandran and B. Saroja Devi
  • Singer : T. M. Soundararajan
  • Music Composed by : K. V. Mahadevan
  • Lyrics written by : Kannadasan
Poyum Poyum Song Lyrics in Tamil (Thaai Sollai Thattadhe 1961)

Poyum Poyum Lyrics in Tamil :

.




: போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே
இறைவன் புத்தியை கொடுத்தானே
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே
மனிதன் பூமியை கெடுத்தானே

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே

கண்கள் இரண்டில் அருள் இருக்கும்
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
கண்கள் இரண்டில் அருள் இருக்கும்
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும்
அது உடன் பிறந்தோரையும் கரு அறுக்கும்

பாயும் புலியின் கொடுமையை
இறைவன் பார்வையில் வைத்தானே
புலியின் பார்வையில் வைத்தானே
இந்த பாழும் மனிதன்
குணங்களை மட்டும் போர்வையில் மறைத்தானே
இதய போர்வையில் மறைத்தானே

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே

.

கைகளை தோளில் போடுகிறான்
அதை கருணை என்றவன் கூறுகிறான்
கைகளை தோளில் போடுகிறான்
அதை கருணை என்றவன் கூறுகிறான்
பைகளில் எதையோ தேடுகிறான்
கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே
இறைவன் புத்தியை கொடுத்தானே
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே
மனிதன் பூமியை கெடுத்தானே

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே