Total Pageviews

Tuesday 27 September 2022

கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே!

 Movie : En Annan 

Song : Kadavul Yen Kallanan 

Sung By : T. M. Soundararajan 

Lyric : Kannadasan

 Music : K. V. Mahadevan

 


 

கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே (3)

கொடுமையை
கண்டவன் கண்ணை
இழந்தான் அதை
கோபித்து தடுத்தவன்
சொல்லை இழந்தான் (2)

இரக்கத்தை
நினைத்தவன் பொன்னை
இழந்தான் (2)

இங்கு
எல்லோர்க்கும்
நல்லவன் தன்னை
இழந்தான் எல்லோர்க்கும்
நல்லவன் தன்னை இழந்தான்

கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே

நெஞ்சுக்கு
தேவை மனசாட்சி
அது நீதி தேவனில்
அரசாட்சி (2)

அத்தனை

உண்மைக்கும் அவன்
சாட்சி (2)
மக்கள் அரங்கத்தில்
வராது அவன் சாட்சி
அரங்கத்தில் வராது
அவன் சாட்சி

கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே

சதி செயல்
செய்தவன் புத்திசாலி
அதை சகித்துக்கொண்டிருந்தவன்
குற்றவாளி (2)

உண்மையை
சொல்பவன் சதிகாரன் (2)
இது உலகத்தில்
ஆண்டவன் அதிகாரம் (2)

கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே

கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே

 

No comments:

Post a Comment