திரைப்படம்: இரு வல்லவர்கள்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் + பி. சுசீலா
பாடல் : கவிஞர் கண்ணதாசன்
இசை: வேதா
ஆண்டு: 1966
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உனக்காக ஓடோடி வந்தேன்
(நான் மலரோடு)
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
(நான் மலரோடு)
நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்
உன் வலை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்
உன் மலர்க் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்
நீ இல்லாமல் யாரோடு
உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்.
(நான் மலரோடு)
பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
(நான் மலரோடு)
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் + பி. சுசீலா
பாடல் : கவிஞர் கண்ணதாசன்
இசை: வேதா
ஆண்டு: 1966
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உனக்காக ஓடோடி வந்தேன்
(நான் மலரோடு)
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
(நான் மலரோடு)
நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்
உன் வலை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்
உன் மலர்க் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்
நீ இல்லாமல் யாரோடு
உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்.
(நான் மலரோடு)
பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
(நான் மலரோடு)
No comments:
Post a Comment