போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
ஒஹோஹோ…
வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம்
வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
இரவல் தந்தவன் கேட்கின்றான்
அதை இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது
இது கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது
அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
ஒஹோஹோ…
எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா
அவன் நாலும் தெரிந்த தலைவனடா
தினம் நாடகமாடும் கலைஞடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
கைப்பற்ற நினைக்குது மனமே - நீ தேடும் போது வருவதுண்டோ - விட்டுப் போகும் போது சொல்வதுண்டோ? - நீ தேடும் போது வருவதுண்டோ - விட்டுப் போகும் போது சொல்வதுண்டோ?
காசே தான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா
அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும் அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும் வரவுக்கு மேலே செலவுகள் செய்தால் அவனும் குருடனும் ஒன்றாகும் களவுக்குப் போகும் பொருளை எடுத்து வறுமைக்குத் தந்தால் தருமமடா களவுக்குப் போகும் பொருளை எடுத்து வறுமைக்குத் தந்தால் தருமமடா பூட்டுக்கு மேலே பூட்டைப் போட்டு பூட்டி வைத்தால் அது கருமமடா
காசே தான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா
கொடுத்தவன் விழிப்பான் எடுத்தவன் முடிப்பான் அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே கொடுத்தவன் விழிப்பான் எடுத்தவன் முடிப்பான் அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிபபதும் பணத்தால் வந்த நிலை தானே சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிபபதும் பணத்தால் வந்த நிலை தானே கையிலும் பையிலும் ஓட்டமிருந்தால் கூட்டமிருக்கும் பின்னோடு தலைகளை ஆட்டும் பொம்மைகளெல்லாம் தாளங்கள் போடும் பின்னோடு
காசே தான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே - நீ தேடும் போது வருவதுண்டோ - விட்டுப் போகும் போது சொல்வதுண்டோ? - நீ தேடும் போது வருவதுண்டோ - விட்டுப் போகும் போது சொல்வதுண்டோ? காசே தான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே பெண்ணாகப் பிறந்தவர்க்கு கண்ணுறக்கம் இரண்டு முறை பிறப்பில் ஒரு தூக்கம் இறப்பில் மறு தூக்கம் இப்போது விட்டு விட்டால் எப்போதும் தூக்கமில்லை என்னரிய கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு
நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல் நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல் நாள் முழுதும் பாடச் சொல்லும் தெள்ளு தமிழ்ப் பாடல் எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி ஈரேழு மொழிகளுடன் போராடச் சொல்லுவதே தீராத தொல்லையடி
மாறும் கன்னி மனம் மாறும் கண்ணன் முகம் தேடும் ஏக்கம் வரும் போது தூக்கமென்பதேது? தான் நினைத்த காதலனை தேற வரும் போது தான் நினைத்த காதலனை தேற வரும் போது தந்தை அதை மறுத்து விட்டால் கண்ணுறக்கம் ஏது? கண்ணுறக்கம் ஏது?
மாலையிட்ட தலைவன் வந்து சேலை தொடும் போது மங்கையரின் தேன் நிலவில் கண்ணுறக்கம் ஏது? கண்ணுறக்கம் ஏது?
ஐயிரண்டு திங்களிலும் பிள்ளை பெறும் போதும் அன்னையென்று வந்த பின்னும் கண்ணுறக்கம் போகும் கண்ணுறக்கம் போகும் கை நடுங்கிக் கண் மறைந்து காலம் வந்து தேடும் கை நடுங்கிக் கண் மறைந்து காலம் வந்து தேடும் காணாத தூக்கமெல்லாம் தானாக சேரும் தானாக சேரும்
போயும் போயும் Poyum Poyum Lyrics in Tamil from Thaai Sollai Thattadhe (1961)
Poyum Poyum Lyrics in Tamil. போயும் போயும் - பாடல் வரிகள், Poyum
Poyum song is from Thaai Sollai Thattadhe 1961. The Movie Star Cast is
M. G. Ramachandran and B. Saroja Devi. Singer of Poyum Poyum is T. M.
Soundararajan. Lyrics are written by Kannadasan. Music is given by K. V.
Mahadevan. Poyum Poyum Lyrics in English
Song : Poyum Poyum
Movie/Album Name : Thaai Sollai Thattadhe 1961
Star Cast : M. G. Ramachandran and B. Saroja Devi
Singer : T. M. Soundararajan
Music Composed by : K. V. Mahadevan
Lyrics written by : Kannadasan
Poyum Poyum Lyrics in Tamil :
.
: போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே இறைவன் புத்தியை கொடுத்தானே அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியைக் கெடுத்தானே மனிதன் பூமியை கெடுத்தானே
போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே
கண்கள் இரண்டில் அருள் இருக்கும் சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும் கண்கள் இரண்டில் அருள் இருக்கும் சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும் உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும் அது உடன் பிறந்தோரையும் கரு அறுக்கும்
பாயும் புலியின் கொடுமையை இறைவன் பார்வையில் வைத்தானே புலியின் பார்வையில் வைத்தானே இந்த பாழும் மனிதன் குணங்களை மட்டும்
போர்வையில் மறைத்தானே இதய போர்வையில் மறைத்தானே
போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே
.
கைகளை தோளில் போடுகிறான் அதை கருணை என்றவன் கூறுகிறான் கைகளை தோளில் போடுகிறான் அதை கருணை என்றவன் கூறுகிறான் பைகளில் எதையோ தேடுகிறான் கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்
போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே இறைவன் புத்தியை கொடுத்தானே அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியைக் கெடுத்தானே மனிதன் பூமியை கெடுத்தானே
ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி இசை பாடுங்கால் பாட வந்தேன் பரம்பொருளே ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி இசை பாடுங்கால் பாட வந்தேன் பரம்பொருளே ஆடுங்கால் எடுத்து நடமிடுவாய் இறைவா
உன் தமிழமுதைப் படித்த நான் பாடும்படி..ஈ.. உன் தமிழமுதைப் படித்த நான் பாடும்படி..ஈ..
தகதக தகதகவென ஆடவா சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா தகதக தகதகவென ஆடவா சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
முத்துக்கொடி சக்திக் குலமகள் வித்துக்கொரு வெள்ளம் துணையென பக்திக் கொடி படரும் நெஞ்சினில் விளையாட தித்திப்பது இறைவன் செயலென பற்றுந்தரும் பரமன் துணையென சுற்றத்தோடு மனிதர் குலமொரு இசைபாட
கற்றுந்தரும் ஒரு வகை அறிவினில் முற்றும் தெரிவதுபோல் மனிதர்கள் வெற்றுப் புகழ் பெறுவார் அவர்களும் உறவாட
திக்குப் பல திமிதிமிதிமி என தக்கத் துணை தக தக தக தகவென தக்கக் கடல் அலையென நடமிடு உலகாட
இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றாகி
எழிலோடு எமையாளவா இயல் இசை நாடகம் முத்தமிழ் தன்னிலே இயங்கியே உலகாளவா
அம்மைக்கும் நாயகா அப்பனே ஐயனே அரசனே நடமாடவா ஆடுகிற காலழகில் காடு பொடியாகவென அம்மையுடன் நீ ஆடவா
சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்த நீ சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்த நீ
கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா.. கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா..