Total Pageviews

Thursday 24 November 2022

மயக்கமா ! கலக்கமா ! மனதிலே குழப்பமா ! வாழ்க்கையில் நடுக்கமா !




மயக்கமா
கலக்கமா மனதிலே
குழப்பமா வாழ்க்கையில்
நடுக்கமா (2)

வாழ்க்கை என்றால்
ஆயிரம் இருக்கும் வாசல்
தோறும் வேதனை இருக்கும் (2)

வந்த துன்பம்
எதுவென்றாலும்
வாடி நின்றால்
ஓடுவதில்லை (2)

எதையும்
தாங்கும் இதயம்
இருந்தால் இறுதி
வரைக்கும் அமைதி
இருக்கும்

மயக்கமா கலக்கமா மனதிலே
குழப்பமா வாழ்க்கையில்
நடுக்கமா (2)

ஏழை மனதை
மாளிகையாக்கி இரவும்
பகலும் காவியம் பாடி (2)

நாளை பொழுதை
இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில்
அமைதியை தேடு (2)

உனக்கும் கீழே
உள்ளவர் கோடி நினைத்து
பார்த்து நிம்மதி நாடு

மயக்கமா
கலக்கமா மனதிலே
குழப்பமா வாழ்க்கையில்
நடுக்கமா (2)

 Song : Mayakkama Kalakkama

  • Movie/Album Name : Sumai Thangi 1962
  • Star Cast : Gemini Ganesan and Devika
  • Singer : P.B. Sreenivas
  • Music Composed by : Viswanathan Ramamoorthy
  • Lyrics written by : Kannadasan

போனால் போகட்டும் போடா !


 

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா

ஒஹோஹோ…

வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம்
வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா

இரவல் தந்தவன் கேட்கின்றான்
அதை இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது
இது கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது
அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா

ஒஹோஹோ…

எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா
அவன் நாலும் தெரிந்த தலைவனடா
தினம் நாடகமாடும் கலைஞடா
போனால் போகட்டும் போடா

போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா

சட்டி சுட்டதடா! கை விட்டதடா! புத்தி கெட்டதடா ! நெஞ்சைத் தொட்டதடா !



 சட்டி சுட்டதடா
கை விட்டதடா (2)
புத்தி கெட்டதடா
நெஞ்சைத் தொட்டதடா (2)

நாலும் நடந்து
முடிந்த பின்னால்
நல்லது கெட்டது
தெரிந்ததடா

சட்டி சுட்டதடா
கை விட்டதடா
புத்தி கெட்டதடா
நெஞ்சைத் தொட்டதடா (2)

பாதி மனதில்
தெய்வம் இருந்து பார்த்து
கொண்டதடா மீதி மனதில்
மிருகம் இருந்து ஆட்டி
வைத்ததடா (2)

ஆட்டி வைத்த
மிருகமின்று அடங்கி
விட்டதடா (2)
அமைதி தெய்வம் முழு
மனதில் கோயில்
கொண்டதடா

சட்டி சுட்டதடா
கை விட்டதடா
புத்தி கெட்டதடா
நெஞ்சைத் தொட்டதடா (2)

ஆரவாரப் பேய்களெல்லாம்
ஓடிவிட்டதடா
ஆலயமணி ஓசை
நெஞ்சில் கூடிவிட்டதடா

தர்ம தேவன்
கோவிலிலே ஒலி
துலங்குதடா (2)

மனம் சாந்தி
சாந்தி சாந்தியென்று
ஓய்வு கொண்டதடா

சட்டி சுட்டதடா
கை விட்டதடா
புத்தி கெட்டதடா
நெஞ்சைத் தொட்டதடா (2)

எறும்புத் தோலை
உரித்துப் பார்க்க யானை
வந்ததடா நான் இதயத்
தோலை உரித்துப் பார்க்க
ஞானம் வந்ததடா (2)

பிறக்கும் முன்னே
இருந்த உள்ளம் இன்று
வந்ததடா (2)
இறந்த பின்னே வரும்
அமைதி வந்து விட்டதடா

சட்டி சுட்டதடா
கை விட்டதடா
புத்தி கெட்டதடா
நெஞ்சைத் தொட்டதடா (2)

 

  • Song : Satti Suttathada
  • Movie/Album Name : Aalayamani 1962
  • Star Cast : Sivaji Ganesan, S. S. Rajendran, C. R. Vijayakumari and B. Saroja Devi
  • Singer : T.M. Soundararajan
  • Music Composed by : Viswanathan Ramamoorthy
  • Lyrics written by : Kannadasan

 

பொன்னை விரும்பும் பூமியிலே !

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என் உயிரே

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என் உயிரே

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலய மணியின் இன்னிசை நீயே
ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலய மணியின் இன்னிசை நீயே

தாய்மை எனக்கே தந்தவன் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என் உயிரே

பறந்து செல்லும்
பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன் பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்

அலையும் நெஞ்சை
அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என் உயிரே

ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே
ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே

வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழ வைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என் உயிரே!

 
Song : Ponnai Virumbum

  • Movie/Album Name : Aalayamani 1962
  • Star Cast : Sivaji Ganesan, S. S. Rajendran, C. R. Vijayakumari and B. Saroja Devi
  • Singer : T. M. Soundararajan
  • Music Composed by : Viswanathan Ramamoorthy
  • Lyrics written by : Kannadasan

Tuesday 27 September 2022

குறுக்கு வழியில்..?, வாழ்வு..?, தேடிடும்..?, குறுட்டு.., உலக..மடா..?,


 

 

குறுக்கு வழியில்..?, வாழ்வு..?, தேடிடும்..?, குறுட்டு.., உலக..மடா..?, இது கொள்ளை..?, அடிப்பதில்..?, வல்லமை.., காட்டும்..?, திருட்டு..?, உலகமடா..?, தம்பி..?, தெரிந்து.., நடந்து.., கொள்ளடா..?, இதயம்.., திருந்த.., மருந்து.., சொல்லடா..?, இருக்கும்.., அறிவை..?, மடமை.., மூடியே..?, இருட்டு.., உலகமடா..?, வாழ்வில்..?, எந்த.., நேரமும்..?, சண்டை.., ஓயாத..?, முறட்டு..?, உலகமடா..?, தம்பி..?, தெரிந்து.., நடந்து.., கொள்ளடா..?, இதயம்.., திருந்த.., மருந்து.., சொல்லடா..?, குறுக்கு வழியில்..?, வாழ்வு..?, தேடிடும்..?, குறுட்டு..?, உலக..மடா..?, ஆஆஆ.., இது கொள்ளை..?, அடிப்பதில்..?, வல்லமை.., காட்டும்..?, திருட்டு..?, உலகமடா..?, தம்பி..?, தெரிந்து.., நடந்து.., கொள்ளடா..?, இதயம்.., திருந்த.., மருந்து.., சொல்லடா..?, விளையும்..?, பயிரை..?, வளரும்..?, கொடியை..?, வேருடன்.., அறுத்து..?, விளையாடும்..?, ம்ம்ம்.., ஹோ..ஹோ.., ஹோஹோஹோ.., ஹோ.., விளையும்..?, பயிரை..?, வளரும்..?, கொடியை..?, வேருடன்.., அறுத்து..?, விளையாடும்..?, மனம்.., வெந்திடும்..?, தோட்டக்..காரனிடம்..?, இரட்டல்.., வார்த்தைகள்..?, ஆ..டும்..?, பல.., வறட்டு..?, கீதமும்..?, பாடும்..?, வித.., வித..மான..?, பொய்களை..?, வைத்து..?, உறட்டும்..?, உலகமடா..?, தம்பி..?, தெரிந்து.., நடந்து.., கொள்ளடா..?, இதயம்.., திருந்த.., மருந்து.., சொல்லடா..?, அன்பு.., படர்ந்த..?, கொம்பினிலே..?, ஒரு.., அகந்தைக்.., குரங்கு..?, தாவும்..?, அதன்.., அழகைக்..?, குலைக்க..?, மேவும்..?, கொம்பு.., ஒடிந்து..?, கொடியும்..?, குலைந்து..?, குரங்கும்.., விழுந்து..?, சாகும்..?, கொம்பு.., ஒடிந்து..?, கொடியும்..?, குலைந்து..?, குரங்கும்.., விழுந்து..?, சாகும்..?, சிலர்..?, குணமும்..?, இதுபோல்..?, குறுகிப்..?, போகும்..?, கிறுக்கு..?, உலகமடா..?, ஆஆ.., தம்பி..?, தெரிந்து.., நடந்து.., கொள்ளடா..?, இதயம்..?, திருந்த..?, மருந்து.., சொல்லடா..?, குறுட்டு வழியில்..?, வாழ்வு.., தேடிடும்..?, குறுட்டு.., உலக..மடா..?, ஆஆஆ.., இது கொள்ளை..?, அடிப்பதில்..?, வல்லமை.., காட்டும்..?, திருட்டு..?, உலகமடா..?, தம்பி..?, தெரிந்து.., நடந்து.., கொள்ளடா..?, இதயம்.., திருந்த.., மருந்து.., சொல்லடா..?, ஆஆஆ.., ஆஆஆ.., ஆ.., ஆ.., ஆ.., – KURUKKU VAZHIYIL VAZHVU THEDIDUM – MOVIE:- MAHADEVI (மகாதேவி)

காசே தான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா !

 

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

திரைப்படம்: சக்கரம்

காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா - அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா
காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா

கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக்
கைப்பற்ற நினைக்குது மனமே
கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக்



கைப்பற்ற நினைக்குது மனமே - நீ
தேடும் போது வருவதுண்டோ - விட்டுப்
போகும் போது சொல்வதுண்டோ? - நீ
தேடும் போது வருவதுண்டோ - விட்டுப்
போகும் போது சொல்வதுண்டோ?

காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா

அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்
அவனும் திருடனும் ஒன்றாகும்
அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்
அவனும் திருடனும் ஒன்றாகும்
வரவுக்கு மேலே செலவுகள் செய்தால்
அவனும் குருடனும் ஒன்றாகும்
களவுக்குப் போகும் பொருளை எடுத்து
வறுமைக்குத் தந்தால் தருமமடா
களவுக்குப் போகும் பொருளை எடுத்து
வறுமைக்குத் தந்தால் தருமமடா
பூட்டுக்கு மேலே பூட்டைப் போட்டு
பூட்டி வைத்தால் அது கருமமடா

காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா

கொடுத்தவன் விழிப்பான் எடுத்தவன் முடிப்பான்
அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே
கொடுத்தவன் விழிப்பான் எடுத்தவன் முடிப்பான்
அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே
சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிபபதும்
பணத்தால் வந்த நிலை தானே
சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிபபதும்
பணத்தால் வந்த நிலை தானே
கையிலும் பையிலும் ஓட்டமிருந்தால்
கூட்டமிருக்கும் பின்னோடு
தலைகளை ஆட்டும் பொம்மைகளெல்லாம்
தாளங்கள் போடும் பின்னோடு

காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா
கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக்
கைப்பற்ற நினைக்குது மனமே - நீ
தேடும் போது வருவதுண்டோ - விட்டுப்
போகும் போது சொல்வதுண்டோ? - நீ
தேடும் போது வருவதுண்டோ - விட்டுப்
போகும் போது சொல்வதுண்டோ?
காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா

கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே!

 Movie : En Annan 

Song : Kadavul Yen Kallanan 

Sung By : T. M. Soundararajan 

Lyric : Kannadasan

 Music : K. V. Mahadevan

 


 

கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே (3)

கொடுமையை
கண்டவன் கண்ணை
இழந்தான் அதை
கோபித்து தடுத்தவன்
சொல்லை இழந்தான் (2)

இரக்கத்தை
நினைத்தவன் பொன்னை
இழந்தான் (2)

இங்கு
எல்லோர்க்கும்
நல்லவன் தன்னை
இழந்தான் எல்லோர்க்கும்
நல்லவன் தன்னை இழந்தான்

கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே

நெஞ்சுக்கு
தேவை மனசாட்சி
அது நீதி தேவனில்
அரசாட்சி (2)

அத்தனை

உண்மைக்கும் அவன்
சாட்சி (2)
மக்கள் அரங்கத்தில்
வராது அவன் சாட்சி
அரங்கத்தில் வராது
அவன் சாட்சி

கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே

சதி செயல்
செய்தவன் புத்திசாலி
அதை சகித்துக்கொண்டிருந்தவன்
குற்றவாளி (2)

உண்மையை
சொல்பவன் சதிகாரன் (2)
இது உலகத்தில்
ஆண்டவன் அதிகாரம் (2)

கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே

கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே

 

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே!

திரைப்படம்: சித்தி இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் 

 இசை: எம்.எஸ். விஸ்வநாதன் 

 பாடியவர்: பி. சுசீலா 

 -------------------------------------------------  


காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
பெண்ணாகப் பிறந்தவர்க்கு கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம் இறப்பில் மறு தூக்கம்
இப்போது விட்டு விட்டால் எப்போதும் தூக்கமில்லை
என்னரிய கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு

ஆரீராரீரீ ஆரீராராரோ ஆரீஆரீராரோ
ஆரீராரீரீ ஆரீரீஆரோ ஆரீராரீரீரோ

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே

நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல்
நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும் தெள்ளு தமிழ்ப் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி
எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி
ஈரேழு மொழிகளுடன் போராடச் சொல்லுவதே தீராத தொல்லையடி

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே

மாறும் கன்னி மனம் மாறும் கண்ணன் முகம் தேடும்
ஏக்கம் வரும் போது தூக்கமென்பதேது?
தான் நினைத்த காதலனை தேற வரும் போது
தான் நினைத்த காதலனை தேற வரும் போது
தந்தை அதை மறுத்து விட்டால் கண்ணுறக்கம் ஏது? கண்ணுறக்கம் ஏது?

மாலையிட்ட தலைவன் வந்து சேலை தொடும் போது
மங்கையரின் தேன் நிலவில் கண்ணுறக்கம் ஏது? கண்ணுறக்கம் ஏது?

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே

ஐயிரண்டு திங்களிலும் பிள்ளை பெறும் போதும்
அன்னையென்று வந்த பின்னும் கண்ணுறக்கம் போகும் கண்ணுறக்கம் போகும்
கை நடுங்கிக் கண் மறைந்து காலம் வந்து தேடும்
கை நடுங்கிக் கண் மறைந்து காலம் வந்து தேடும்
காணாத தூக்கமெல்லாம் தானாக சேரும் தானாக சேரும்

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே

ஆரீராரீரீ ராரீராராரோ ஆரீராரீராரோ ஆ
ஆரீராரீரீ ஆரீராராரோ ஆரீராரீராரோ ஆரீராரீராரோ!

Sunday 18 September 2022

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை !

 

 

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை

பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணம் இல்லாத மனிதருக்கு சொந்தமெல்லாம் துன்பம்

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை

மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு

அவன் கனவில் அவள் வருவாள், அவனை பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார்? யாரை பார்த்து அணைப்பாள்?

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

படம் : அன்னை
பாடியவர் : சந்திரபாபு
பாடல் வரிகள் : கண்ணதாசன்

போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே இறைவன் புத்தியை கொடுத்தானே!

போயும் போயும் Poyum Poyum Lyrics in Tamil from Thaai Sollai Thattadhe (1961)

Poyum Poyum Lyrics in Tamil. போயும் போயும் - பாடல் வரிகள், Poyum Poyum song is from Thaai Sollai Thattadhe 1961. The Movie Star Cast is M. G. Ramachandran and B. Saroja Devi. Singer of Poyum Poyum is T. M. Soundararajan. Lyrics are written by Kannadasan. Music is given by K. V. Mahadevan. Poyum Poyum Lyrics in English

  • Song : Poyum Poyum
  • Movie/Album Name : Thaai Sollai Thattadhe 1961
  • Star Cast : M. G. Ramachandran and B. Saroja Devi
  • Singer : T. M. Soundararajan
  • Music Composed by : K. V. Mahadevan
  • Lyrics written by : Kannadasan
Poyum Poyum Song Lyrics in Tamil (Thaai Sollai Thattadhe 1961)

Poyum Poyum Lyrics in Tamil :

.




: போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே
இறைவன் புத்தியை கொடுத்தானே
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே
மனிதன் பூமியை கெடுத்தானே

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே

கண்கள் இரண்டில் அருள் இருக்கும்
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
கண்கள் இரண்டில் அருள் இருக்கும்
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும்
அது உடன் பிறந்தோரையும் கரு அறுக்கும்

பாயும் புலியின் கொடுமையை
இறைவன் பார்வையில் வைத்தானே
புலியின் பார்வையில் வைத்தானே
இந்த பாழும் மனிதன்
குணங்களை மட்டும் போர்வையில் மறைத்தானே
இதய போர்வையில் மறைத்தானே

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே

.

கைகளை தோளில் போடுகிறான்
அதை கருணை என்றவன் கூறுகிறான்
கைகளை தோளில் போடுகிறான்
அதை கருணை என்றவன் கூறுகிறான்
பைகளில் எதையோ தேடுகிறான்
கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே
இறைவன் புத்தியை கொடுத்தானே
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே
மனிதன் பூமியை கெடுத்தானே

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே

 

Monday 18 July 2022

தகதக தகதகவென ஆடவா ! சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா!

ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி இசை
பாடுங்கால் பாட வந்தேன் பரம்பொருளே
ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி இசை
பாடுங்கால் பாட வந்தேன் பரம்பொருளே
ஆடுங்கால் எடுத்து நடமிடுவாய் இறைவா



உன் தமிழமுதைப் படித்த நான் பாடும்படி..ஈ..
உன் தமிழமுதைப் படித்த நான் பாடும்படி..ஈ..

தகதக தகதகவென ஆடவா
சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
தகதக தகதகவென ஆடவா
சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா

ஆலகாலனே ஆலங்காட்டினில்
ஆடிடும் நாயகனே
நீலகண்டனே வேதநாயகா
நீதியின் காவலனே
ஆலகாலனே ஆலங்காட்டினில்
ஆடிடும் நாயகனே
நீலகண்டனே வேதநாயகா
நீதியின் காவலனே

தாள வகைகளோடு மேள துந்துபிகள்
முழங்கிட ஓர் கணமே
காலைத் தூக்கியே ஆனந்தத் தாண்டவம்
ஆடுக மன்னவனே
தாள வகைகளோடு மேள துந்துபிகள்
முழங்கிட ஓர் கணமே
காலைத் தூக்கியே ஆனந்தத் தாண்டவம்
ஆடுக மன்னவனே

முத்துக்கொடி சக்திக் குலமகள் வித்துக்கொரு
வெள்ளம் துணையென
பக்திக் கொடி படரும் நெஞ்சினில் விளையாட
தித்திப்பது இறைவன் செயலென பற்றுந்தரும்
பரமன் துணையென
சுற்றத்தோடு மனிதர் குலமொரு இசைபாட

கற்றுந்தரும் ஒரு வகை அறிவினில்
முற்றும் தெரிவதுபோல் மனிதர்கள்
வெற்றுப் புகழ் பெறுவார் அவர்களும் உறவாட

திக்குப் பல திமிதிமிதிமி என
தக்கத் துணை தக தக தக தகவென
தக்கக் கடல் அலையென நடமிடு உலகாட

இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றாகி எழிலோடு எமையாளவா
இயல் இசை நாடகம் முத்தமிழ் தன்னிலே
இயங்கியே உலகாளவா

அம்மைக்கும் நாயகா அப்பனே ஐயனே
அரசனே நடமாடவா
ஆடுகிற காலழகில் காடு பொடியாகவென
அம்மையுடன் நீ ஆடவா

சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ
நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்த நீ
சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ
நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்த நீ

கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ
களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா..
கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ
களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா..

உலகத்து நீதியே சமயத்துப் பொருளே
இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே
உலகத்து நீதியே சமயத்துப் பொருளே
இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே

ஆடவா நடமாடவா
விளையாடவா உலகாடவா
ஆடவா நடமாடவா
விளையாடவா உலகாடவா

நாதகீத போதவேத
பாவராகத் தாளமோடு
நாதகீத போதவேத
பாவராகத் தாளமோடு

அடியவர் திருமுடி வணங்கிட
கொடி உயர்ந்திட படை நடுங்கிட
அடியவர் திருமுடி வணங்கிட
கொடி உயர்ந்திட படை நடுங்கிட

தகதக தகதக என ஆடவா
சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
தகதக தகதக என ஆடவா
சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
தகதக தகதக என ஆடவா
சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா