பாடல் : பட்டுக்கோட்டை
இசை : வெங்கட்ராமன்
பாடியவர் : திருச்சி லோகநாதன்
வருடம் : 1960
🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
கையிலே வாங்கினேன் பையிலே
போடலே!
காசுபோன இடம் தெரியலே _ என்
காதலிப் பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்வதென்றும் புரியலே
ஏழைக்கும் காலம் சரியில்லே. . .
மாசம் முப்பது நாளும் ஒழைச்சு
வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு
காசை வாங்கினாக் கடன்கார னெல்லாம்
கணக்கு நோட்டோட நிக்கிறான்
வந்து
எனக்கு உனக்குன்னு பிய்க்கிறான்
(கையிலே…)
சொட்டுச் சொட்டா வேர்வை விட்டா
பட்டினியால் பாடுபட்டா
கட்டுக்கட்டா நோட்டுச் சேருது
கெட்டிக்காரன் பொட்டியிலே
அது
குட்டியும் போடுது வட்டியிலே
(கையிலே…)
விதவிதமாய்த் துணிகள் இருக்கு
விலையைக் கேட்டா நடுக்கம் வருது
வகைவகையா நகைகள் இருக்கு
மடியைப் பார்த்தா மயக்கம் வருது
எதைஎதையோ வாங்கணுமின்னு
அண்ணே
(எதை)
எண்ணமிருக்கு வழியில்லே
இதை
எண்ணாமிலிருக்கவும் முடியல்லே
(கையிலே…)
கண்ணுக்கு அழகாப் பொண்ணைப் படைச்சான்
பொண்ணுக்குத் துணையா ஆணப் படைச்சான்
ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்
ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்
உலகம் நிறைய இன்பத்தைப் படைச்சான்
என்னைப் போலே பலரையும் படைச்சு
அண்ணே
என்னைப் போலே பலரையும் படைச்சு
இதுக்கும் அதுக்கும் ஏங்க வைச்சான்
ஏழையைக் கடவுள் ஏன் படைச்சான்?
(கையிலே…)