பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : திருமணமாம் திருமணமாம்
 தெருவெங்கும் ஊர்வலமாம்
 ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
 ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஆண் : திருமணமாம் திருமணமாம்
 தெருவெங்கும் ஊர்வலமாம்
 ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
 ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஆண் : கூரை நாட்டு புடவை கட்டி
 குனிந்திருப்பாளாம்
 ஒரு கூடை நிறைய பூவை தலையில்
 சுமந்திருப்பாளாம்
ஆண் : கூரை நாட்டு புடவை கட்டி
 குனிந்திருப்பாளாம்
 ஒரு கூடை நிறைய பூவை தலையில்
 சுமந்திருப்பாளாம்
ஆண் : சேர நாட்டு யானை தந்தம்
 போலிருப்பாளாம்
 சேர நாட்டு யானை தந்தம்
 போலிருப்பாளாம்
 நல்ல சீரக சம்பா அரிசி போல
 சிரிச்சிருப்பாளாம்
 சிரிச்சிருப்பாளாம்………
 ஒஹோஹ் ஹோ ஹோய்
ஆண் : திருமணமாம் திருமணமாம்
 தெருவெங்கும் ஊர்வலமாம்
 ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
 ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஆண் : செம்பருத்தி பூவை போல
 செவந்திருப்பாளாம்
 நைசு சிலுக்கு துணியை போல
 காற்றில் அசைந்திருப்பாளாம்
ஆண் : செம்பருத்தி பூவை போல
 செவந்திருப்பாளாம்
 நைசு சிலுக்கு துணியை போல
 காற்றில் அசைந்திருப்பாளாம்
ஆண் : செப்பு சிலை போல உருண்டு
 திறந்திருப்பாளாம்
 செப்பு சிலை போல உருண்டு
 திறந்திருப்பாளாம்
 நல்ல சேலம் ஜில்லா மாம்பழம் போல்
 கனிந்திருப்பாளாம்
ஆண் : திருமணமாம் திருமணமாம்
 தெருவெங்கும் ஊர்வலமாம்
 ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
 ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஆண் : ஊர்வலத்தில் வந்தவள் யார்
 கூறடியம்மா
 அவள் உடனிருந்த மாப்பிள்ளைதான்
 யாரடியம்மா
ஆண் : ஊர்வலத்தில் வந்தவள் யார்
 கூறடியம்மா
 அவள் உடனிருந்த மாப்பிள்ளைதான்
 யாரடியம்மா
ஆண் : மாலை சூடும் மணமகளும்
 நீதான்டியம்மா
 மாலை சூடும் மணமகளும்
 நீதான்டியம்மா
 இந்த மணமகனை கண் திறந்து பாரடியம்மா
 பாரடியம்மா
 பாரடியம்மா………..
 ஓஹோஹோ……..ஹோ…….ஹோய் ….ஓஹோ….
ஆண் : திருமணமாம் திருமணமாம்
 தெருவெங்கும் ஊர்வலமாம்
 ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
 ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
