Total Pageviews

Friday, 20 September 2019

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு !




இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு!

அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு !

இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை !

இதை எண்ணிடாமல் சேர்த்து வைத்து காத்து என்ன நன்மை!

இருக்கும் வரை இன்பங்களை அனுபவிக்கும் தன்மை!

இல்லை என்றால் வாழ்வினிலே உனக்கு ஏது இனிமை!

கனி ரசமாம் மது அருந்தி களிப்பதல்ல இன்பம்!

கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்!

இணையில்லா மனையாளின் வாய் மொழியே இன்பம்!

அவள் இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்!

மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்!

வாழ்வினிலே ஒருவனுக்கு தருவதல்ல இன்பம்!

மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளை செல்வம்!

உன் மார் மீது உதைப்பதிலே கிடைப்பதுதான் இன்பம்!

எண்ணம் - மருதகாசி

குரல் - சீர்காழி கோவிந்தராஜன்

இசை - கே வி மகாதேவன்

திரைச்சித்திரம் - மானமுள்ள மறுதாரம்


Wednesday, 20 December 2017

ஊருக்கும் வெட்கமில்லை! இந்த உலகுக்கும் வெட்கமில்லை !




ஊருக்கும் வெட்கமில்லை 
இந்த உலகுக்கும் வெட்கமில்லை 
யாருக்கும் வெட்கமில்லை 
இதிலே அவளுக்கு வெட்கமென்ன..! 
ஏ சமுதாயமே.... 

மேலும் கீழும் கோடுகள் போடு 
அதுதான் ஓவியம் 
நீ சொன்னால் காவியம் 
ஓவியம் என்றால் என்னவென்று 
தெரிந்தவர் இல்லையடா..! 
குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் 
அதுதான் தொல்லையடா..! 

அத்தனை பழமும் சொத்தைகள்தானே 
ஆண்டவன் படைப்பினிலே..! 
அத்திப்பழத்தை குற்றம் கூற 
யாருக்கும் வெக்கமில்லை..! 
மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து 
முதுகைப் பாருங்கள்..! 
முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு 
அதனைக் கழுவுங்கள்..! 

சுட்டும் விரலால் எதிரியை காட்டி 
குற்றம் கூறுகையில்..! 
மற்றும் மூன்று விரல்கள் 
உங்கள் மார்பினை காட்டுதடா..! 
எங்கேயாவது மனிதன் ஒருவன் 
இருந்தால் சொல்லுங்கள்..! 
இருக்கும் அவனும் புனிதன் என்றால் 
என்னிடம் காட்டுங்கள்..! 

அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால் 
அவனுக்கு வெட்கமில்லை..! 
அத்தனை பேரையும் படைத்தானே 
அந்த சிவனுக்கும் வெட்கமில்லை..! 
இப்போதிந்த உலகம் முழுவதும் 
எவனுக்கும் வெட்கமில்லை..! 
எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும் 
எமனுக்கும் வெட்கமில்லை..!

Sunday, 11 September 2016

உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால். .


படம் : வேட்டைக்காரன்

இசை : K.V.மகாதேவன்

பாடல் : கண்ணதாசன்

பாடியவர் : T.M.சௌந்தராஜன்

வருடம்: 1964

🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹🎹

உன்னை அறிந்தால்...


நீ உன்னை அறிந்தால். .

உலகத்தில் போராடலாம்

உயர்ந்தாலும். . . தாழ்ந்தாலும். . .

தலை வணங்காமல் நீ வாழலாம்

(உன்னை)


மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை

மான் என்று சொல்வதில்லையா. . .

தன்னை தானும் அறிந்து கொண்டு

ஊருக்கும் சொல்பவர்கள்

தலைவர்கள் ஆவதில்லையா. . .

(மானம் பெரியதென்று)
.
.
.
(உன்னை அறிந்தால்)

மாபெரும் சபைகளில் நீ நடந்தால்

உனக்கு மாலைகள் விழவேண்டும்

ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று

போற்றிப் புகழ வேண்டும்

(மாபெரும்)

உன்னை அறிந்தால்...


நீ உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம்

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

தலை வணங்காமல் நீ வாழலாம். . .

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் !




படம்: முள்ளும் மலரும்

இசை: இளையராஜா

பாடியவர் : யேசுதாஸ்

பாடலாசிரியர்: கண்ணதாசன்

வருடம் : 1978

🎶🎧🎶🎧🎶🎧🎶🎧🎶🎧

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

என் மீது மோதுதம்மா

செந்தாழம்பூவில்...

பூ வாசம் மேடை போடுதம்மா

பெண் போல ஜாடை பேசுதம்மா

அம்மம்மா. . . ஆனந்தம்

வளைந்து நெளிந்து போகும்பாதை

மங்கை மோக கூந்தலோ

மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்

பருவ நாண ஊடலோ...

ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது

ஆசை குயில் பாஷை இன்றி

ராகம் என்ன பாடுது

காடுகள் மலைகள் தேவன் கலைகள்

செந்தாழம்பூவில்...

அழகு மிகுந்த ராஜகுமாரி

மேகமாக போகிறாள்

ஜரிகை நெளியும் சேலை கொண்டு

மலையை மூட பார்க்கிறாள்

பள்ளம் சிலர் உள்ளம் என

ஏன் படைத்தான் ஆண்டவன்

பட்டம் தர தேடுகின்றேன்

எங்கே அந்த நாயகன்

மலையின் காட்சி இறைவன் ஆட்சி

செந்தாழம்பூவில்...

இளைய பருவம் மலையில் வந்தால்

ஏகம் சொர்க்க சிந்தனை

இதழில் வருடும் பனியின் காற்று

கம்பன் செய்த வர்ணனை

ஓடை தரும் வாடை காற்று

வான் உலகை காட்டுது

உள்ளே வரும் வெள்ளம் ஒன்று

எங்கோ என்னை கூட்டுது

மறவேன் மறவேன் அற்புத காட்சி

செந்தாழம்பூவில்...

Wednesday, 31 August 2016

கையிலே வாங்கினேன் பையிலே போடலே காசுபோன இடம் தெரியலே !



படம் : இரும்புத்திரை

பாடல் : பட்டுக்கோட்டை

இசை : வெங்கட்ராமன்

பாடியவர் : திருச்சி லோகநாதன்

வருடம் : 1960

🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼

கையிலே வாங்கினேன் பையிலே 


போடலே!

காசுபோன இடம் தெரியலே _ என்



காதலிப் பாப்பா காரணம் கேப்பா

ஏது சொல்வதென்றும் புரியலே

ஏழைக்கும் காலம் சரியில்லே. . .


மாசம் முப்பது நாளும் ஒழைச்சு

வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு

காசை வாங்கினாக் கடன்கார னெல்லாம்

கணக்கு நோட்டோட நிக்கிறான்

வந்து


எனக்கு உனக்குன்னு பிய்க்கிறான்

(கையிலே…)

சொட்டுச் சொட்டா வேர்வை விட்டா

பட்டினியால் பாடுபட்டா

கட்டுக்கட்டா நோட்டுச் சேருது

கெட்டிக்காரன் பொட்டியிலே

அது


குட்டியும் போடுது வட்டியிலே

(கையிலே…)


விதவிதமாய்த் துணிகள் இருக்கு

விலையைக் கேட்டா நடுக்கம் வருது

வகைவகையா நகைகள் இருக்கு

மடியைப் பார்த்தா மயக்கம் வருது

எதைஎதையோ வாங்கணுமின்னு 


அண்ணே      

(எதை)

எண்ணமிருக்கு வழியில்லே

இதை


எண்ணாமிலிருக்கவும் முடியல்லே

(கையிலே…)

கண்ணுக்கு அழகாப் பொண்ணைப் படைச்சான்

பொண்ணுக்குத் துணையா ஆணப் படைச்சான்

ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்

ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்

உலகம் நிறைய இன்பத்தைப் படைச்சான்

என்னைப் போலே பலரையும் படைச்சு

அண்ணே


என்னைப் போலே பலரையும் படைச்சு

இதுக்கும் அதுக்கும் ஏங்க வைச்சான்

ஏழையைக் கடவுள் ஏன் படைச்சான்?

(கையிலே…)

Thursday, 14 July 2016

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் ?

திரைப்படம்:  இரு வல்லவர்கள்

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் + பி. சுசீலா

பாடல் : கவிஞர் கண்ணதாசன்

இசை: வேதா

ஆண்டு: 1966

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்

என் மகராணி உனக்காக ஓடோடி வந்தேன்

(நான் மலரோடு)

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்

உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

(நான் மலரோடு)


நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்

உன் வலை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்

உன் மலர்க் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்

உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்

நீ இல்லாமல் யாரோடு
உறவாட வந்தேன்

உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்.

(நான் மலரோடு)


பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத

நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக

நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற


நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்

உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

(நான் மலரோடு)



Monday, 11 July 2016

படம் : எதிர் நீச்சல் : தாமரைக் கண்ணங்கள்..



படம் : எதிர் நீச்சல்

பாடியவர்கள் : P.B.ஸ்ரீனிவாஸ் + P.சுஷீலா

பாடல் : வாலி

இசை : குமார்

வருடம்: 1968

🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼

தாமரைக் கண்ணங்கள்.. !

தேன்மலர்க் கிண்ணங்கள் !

எத்தனை வண்ணங்கள்..!

முத்தமாய் சிந்தும் போது !

பொங்கிடும் எண்ணங்கள்!

மாலையில் சந்தித்தேன் !


மையலில் சிந்தித்தேன்!

மங்கை நான் கன்னித்தேன் !

காதலன் தீண்டும் போது கைகளை மன்னித்தேன் !.


கொத்து மலர்க்குழல் பாத மலந்திடும் சித்திரமோ...

முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ...

(கொத்து)

துயில் கொண்ட வேளையிலே...

குளிர் கண்ட மேனியிலே

துணை வந்து சேரும்போது

சொல்லவோ இன்பங்கள்

(மாலையில்)

ஆலிலை மேலொரு கண்ணனைப் போல் இவன் வந்தவனோ...

நூலிடை மேலொரு
நாடகமாடிட நின்றவனோ...

சுமை கொண்ட பூங்கொடியின்

சுவை கொண்ட தேன்கனியை

உடை கொண்டு மூடும்போது...

உறங்குமோ உன்னழகு...

(தாமரை)

தேன்மலர்க் கிண்ணங்கள்!

எத்தனை வண்ணங்கள்.. !

முத்தமாய் சிந்தும் போது !

பொங்கிடும் எண்ணங்கள் !

மாலையில் சந்தித்தேன் !


மையலில் சிந்தித்தேன் !

மங்கை நான் கன்னித்தேன் !

காதலன் தீண்டும் போது கைகளை மன்னித்தேன்.


கொத்து மலர்க்குழல் பாத மலந்திடும் சித்திரமோ...

முத்து நகை தரும் மெல்லிய  செவ்விதழ் ரத்தினமோ...

(கொத்து)

துயில் கொண்ட வேளையிலே...

குளிர் கண்ட மேனியிலே

துணை வந்து சேரும்போது

சொல்லவோ இன்பங்கள்

(மாலையில்)

ஆலிலை மேலொரு
கண்ணனைப் போல் இவன் வந்தவனோ...

நூலிடை மேலொரு
நாடகமாடிட நின்றவனோ...

சுமை கொண்ட
பூங்கொடியின்

சுவை கொண்ட
தேன்கனியை

உடை கொண்டு மூடும்போது...

உறங்குமோ உன்னழகு...

(தாமரை)